நீ எனை பிரியும் தருணத்தின் நினைவு கூட வலி தருகின்றது கடைசி சந்திப்பாகிவிடுமோ என உன் பார்வைகள் அச்சுறுத்தும்.. எந்நொடியிலும் விழ எத்தனிக்கும் ஈரம் என் விழிகளின் ஓரம் தேங்கியபடி நின்று துடிக்கும், உதிராத வார்த்தையொன்று உதட்டினுள்ளே உறைந்து கிடக்கும்.. உனக்கான என் சொற்கள் எல்லாம் மெளனத்தின் ஆழத்தில் அமிழ்ந்திருக்கும்.. அடக்கமுடியாமல் கேட்கத் துடிக்கும் காதல் மனதின் ஒரே கேள்வி ‘எப்போது திரும்பி வருவாய் நீ?
‘கவிதை’ பகுப்புக்கான தொகுப்பு
பிரிவுத்துயர்
Posted in கவிதை on மே 13, 2008 | Leave a Comment »